புதன், 9 டிசம்பர், 2009

சமீபத்தில் நான் படித்தவைகள்

மிக சமீபத்தில் நான் படித்த புத்தகங்களைப் பற்றி நான் இங்கு உங்களோடு பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன் .
என் வாசிப்புத்தளம் மிக சிறிய சுற்றளவு கொண்டதாகவே நான் கருதுகிறேன் . உண்மை கடவுளுக்கு தான் தெரியும் . நான் படித்த புத்தகங்களை உங்களுக்கு பரிந்துரை செய்ய நான் இதை எழுத வில்லை . மாறாக நான் என் வாசிப்புத்தளத்தை அதன் சுற்றள்ளவை பெரிதாக்கவே விரும்புகிறேன் . நான் தமிழ் புத்தகம்களை மட்டுமே படித்துப் பழக்கப் பட்டவன் .

புத்தகம் : ஒரு புளியமரத்தின் கதை
எழுத்தாளர் : சுந்தர ராமசாமி

இதை படித்தபிறகே நாவல் என்றால் அப்படி இருக்கா வேண்டும்? என்பது எனக்கு புலனானது .
தமிழில் எப்படி ஒரு நாவலைப் படிப்பது எது முதல் முறை எனக்கு .. எனக்கு மிகவும் பிடித்த முறையில் கதை நகர்ந்தது . நான்கு வரிக்குட 'புளியமரம்' என்ற சொல் இல்லாமல் இருக்காது . என் கிராமத்தில் இருந்த பூச மரத்தை எனக்கு நினைவுபடுத்தியது .

புத்தகம் : மதராசபட்டினம் (ஒரு நகரத்தின் கதை )
எழுத்தாளர் : நரசய்யா

தமிழ் நாட்டில் 'சென்னை' என்ற சொல் தெரியாமல் யாராலும் இருக்க முடியாது . ஆனால் எந்த சொல் எப்படி வந்தது என்று விலாவரியாக சொல்லும் புத்தகம் தான் இந்த 'மதராசபட்டினம் ' . நம்மைப் பற்றி நம்மகே அடையாளம் கட்டும் ஒரு மிக பிரமாதமான புத்தகம் . சென்னை தோன்றியது முதல் விடுதைலை கிடைப்பதுவரை இந்த புத்தகத்தில் பதிவுச் செய்யப் படுகிறது . வரலாறை எப்படி சொல்ல வேண்டும் என்று நரசய்யா விடம் தான் கற்றுக்வ் கொள்ள வேண்டும் ...

புத்தகம் : விசும்பு
எழுத்தாளர் : ஜெயாமோகன்

தமிழில் சுஜாதாவின் இடத்தை நிரப்ப வந்த மிக சிறந்த எழுத்தாளர் . குறிப்பாக sci-fi எனப்படும் அறிவியல் புனைகதைகளை மிக சிறப்பாக எழுதுகிறார் . விசும்பு தார்க்கு ஒரு மைல்கல் . அவருடைய மாற்ற புததகங்களும் எனக்கு மிகவும் பிடிதாவை . அவருடைய தமிழை படிப்பதே கடினமாக உள்ளது எனக்கு . ஆனாலும் எனக்கு பிடிக்கும் ...


தற்போது நான் படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் "முன்று விரல்கள் " மென்பொருள் சார்ந்து வரும் முதல் நாவல் .. எதைப் பற்றி அடுத்த தாபலில் சொல்ல்கிறேன் ........

செவ்வாய், 27 அக்டோபர், 2009

தமிழ் வளர தமிழக அரசு செய்ய வேண்டியது

தமிழைப் பற்றி அதிகம் கவலைப் படுவோர் , தமிழின் வளச்சிக்கு அத்தனை துணை புரிந்ததாக தெரியவில்லை . மற்ற மொழிகளை போல தமிழ் மொழியை விரும்பி கற்க எந்த தமிழரும் முன் வருவதில்லை . அவர்கைளை கேட்டால் , மொழியின் கடினதனமையினை காரணமாக சொல்ல்கிறார்கள் . தமிழ் நிஜத்தில் கடினமான மொழி இல்லை. இருந்தும் தமிழ் வளர்ச்சி இங்கிலீஷ் மொழியை பார்க்கும் பொது மிக குறைவான வளர்ச்சியே அடைந்திருக்கிறது . ஏனென்றால் ? தமிழை கற்க சரியான வழிகாட்டி இல்லை என்பதே . வழிகாட்டி என்று நான் கூறுவது தமிழ் அகராதியை...

உலக தமிழ் மாநாடு நடக்கவிருக்கும் இந்த நேரதில் , நான் எதை கூறுவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் .

ஒரு மொழியை கற்று நான்கு தேர்ச்சிபெற , அந்த மொழியின் அகராதியின் உதவி மிக முக்கியமாக தேவை . நாம் தமிழ் மொழி அகராதிகளை பார்த்தால் அப்படி " தமிழ்ப் பற்றுடன்" இருப்பதக தெரியவில்லை. நமது அகராதிகள் பல பிழைகளையும் குறைகளையும் உள்ளடக்கியதாக உள்ளது .

நமது அகராதிகளில் உள்ள குறைகள் :

எந்த அகராதிகளிலும் எடுத்துக்காட்டுகள் இல்லை , இங்கிலீஷ் அகராதிகளை போல் . அதவே நமது பெரிய குறை .

எடுத்துக்காட்டு: விபணி என்றால் அங்காடி அல்லது சந்தை என்று பொருள் .

எதை அபபடியே தராமல் ,

வினோத் விபணி வரை போயிருக்கான் . என்று சராசரி தமிழனுக்கும் புரியும் படி அச்சிட்டு அகராதிகள் வர வேண்டும் ..

அதுமட்டும் இல்லைமல் தமிழ் ஒரு சொலுக்கு பல அர்த்தம்கள் உள்ளன .

எடுத்துக்காட்டு: படி என்ற சொலுக்கு குணம் , சம்பளம் , ஒப்பு , விதம் , என பல அர்த்தங்கள் இருப்பதால் புரிந்துக்கொள்ள கடினமாக உள்ளது .

இதையும் எடுத்துக்காட்டு சேர்த்து சொன்னால் எளிதில் புரியும் .

இங்கிலீஷ் மொழி வளர்ந்ததிக்கு இந்த முறை முக்கிய காரணம் .

தமிழில் அகராதிகளில் தொழில்நுட்ப சொல்கள் பல உள்ளன . அவற்றை அகராதிகளில் இடம்பெற செய்ய வேண்டும் . அனைத்து துறைகளிலும் உள்ள தமிழ் தொழில்நுட்ப சொல்கள் திறடி அகராதிகளில் சேர்க்க வேண்டும் .

தமிழக அரசே அகராதிகளை குறைந்த விலைக்கு நூலககங்கள் வழியாக விற்க வேண்டும் .

எத்தனை சரியா செய்தலே தமிழ் மொழி நன்ற பரவி உலக மொழியை மாறும் என்பது என் கருத்து ..

வாழக தமிழ் ...