புதன், 9 டிசம்பர், 2009

சமீபத்தில் நான் படித்தவைகள்

மிக சமீபத்தில் நான் படித்த புத்தகங்களைப் பற்றி நான் இங்கு உங்களோடு பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன் .
என் வாசிப்புத்தளம் மிக சிறிய சுற்றளவு கொண்டதாகவே நான் கருதுகிறேன் . உண்மை கடவுளுக்கு தான் தெரியும் . நான் படித்த புத்தகங்களை உங்களுக்கு பரிந்துரை செய்ய நான் இதை எழுத வில்லை . மாறாக நான் என் வாசிப்புத்தளத்தை அதன் சுற்றள்ளவை பெரிதாக்கவே விரும்புகிறேன் . நான் தமிழ் புத்தகம்களை மட்டுமே படித்துப் பழக்கப் பட்டவன் .

புத்தகம் : ஒரு புளியமரத்தின் கதை
எழுத்தாளர் : சுந்தர ராமசாமி

இதை படித்தபிறகே நாவல் என்றால் அப்படி இருக்கா வேண்டும்? என்பது எனக்கு புலனானது .
தமிழில் எப்படி ஒரு நாவலைப் படிப்பது எது முதல் முறை எனக்கு .. எனக்கு மிகவும் பிடித்த முறையில் கதை நகர்ந்தது . நான்கு வரிக்குட 'புளியமரம்' என்ற சொல் இல்லாமல் இருக்காது . என் கிராமத்தில் இருந்த பூச மரத்தை எனக்கு நினைவுபடுத்தியது .

புத்தகம் : மதராசபட்டினம் (ஒரு நகரத்தின் கதை )
எழுத்தாளர் : நரசய்யா

தமிழ் நாட்டில் 'சென்னை' என்ற சொல் தெரியாமல் யாராலும் இருக்க முடியாது . ஆனால் எந்த சொல் எப்படி வந்தது என்று விலாவரியாக சொல்லும் புத்தகம் தான் இந்த 'மதராசபட்டினம் ' . நம்மைப் பற்றி நம்மகே அடையாளம் கட்டும் ஒரு மிக பிரமாதமான புத்தகம் . சென்னை தோன்றியது முதல் விடுதைலை கிடைப்பதுவரை இந்த புத்தகத்தில் பதிவுச் செய்யப் படுகிறது . வரலாறை எப்படி சொல்ல வேண்டும் என்று நரசய்யா விடம் தான் கற்றுக்வ் கொள்ள வேண்டும் ...

புத்தகம் : விசும்பு
எழுத்தாளர் : ஜெயாமோகன்

தமிழில் சுஜாதாவின் இடத்தை நிரப்ப வந்த மிக சிறந்த எழுத்தாளர் . குறிப்பாக sci-fi எனப்படும் அறிவியல் புனைகதைகளை மிக சிறப்பாக எழுதுகிறார் . விசும்பு தார்க்கு ஒரு மைல்கல் . அவருடைய மாற்ற புததகங்களும் எனக்கு மிகவும் பிடிதாவை . அவருடைய தமிழை படிப்பதே கடினமாக உள்ளது எனக்கு . ஆனாலும் எனக்கு பிடிக்கும் ...


தற்போது நான் படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் "முன்று விரல்கள் " மென்பொருள் சார்ந்து வரும் முதல் நாவல் .. எதைப் பற்றி அடுத்த தாபலில் சொல்ல்கிறேன் ........

செவ்வாய், 27 அக்டோபர், 2009

தமிழ் வளர தமிழக அரசு செய்ய வேண்டியது

தமிழைப் பற்றி அதிகம் கவலைப் படுவோர் , தமிழின் வளச்சிக்கு அத்தனை துணை புரிந்ததாக தெரியவில்லை . மற்ற மொழிகளை போல தமிழ் மொழியை விரும்பி கற்க எந்த தமிழரும் முன் வருவதில்லை . அவர்கைளை கேட்டால் , மொழியின் கடினதனமையினை காரணமாக சொல்ல்கிறார்கள் . தமிழ் நிஜத்தில் கடினமான மொழி இல்லை. இருந்தும் தமிழ் வளர்ச்சி இங்கிலீஷ் மொழியை பார்க்கும் பொது மிக குறைவான வளர்ச்சியே அடைந்திருக்கிறது . ஏனென்றால் ? தமிழை கற்க சரியான வழிகாட்டி இல்லை என்பதே . வழிகாட்டி என்று நான் கூறுவது தமிழ் அகராதியை...

உலக தமிழ் மாநாடு நடக்கவிருக்கும் இந்த நேரதில் , நான் எதை கூறுவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் .

ஒரு மொழியை கற்று நான்கு தேர்ச்சிபெற , அந்த மொழியின் அகராதியின் உதவி மிக முக்கியமாக தேவை . நாம் தமிழ் மொழி அகராதிகளை பார்த்தால் அப்படி " தமிழ்ப் பற்றுடன்" இருப்பதக தெரியவில்லை. நமது அகராதிகள் பல பிழைகளையும் குறைகளையும் உள்ளடக்கியதாக உள்ளது .

நமது அகராதிகளில் உள்ள குறைகள் :

எந்த அகராதிகளிலும் எடுத்துக்காட்டுகள் இல்லை , இங்கிலீஷ் அகராதிகளை போல் . அதவே நமது பெரிய குறை .

எடுத்துக்காட்டு: விபணி என்றால் அங்காடி அல்லது சந்தை என்று பொருள் .

எதை அபபடியே தராமல் ,

வினோத் விபணி வரை போயிருக்கான் . என்று சராசரி தமிழனுக்கும் புரியும் படி அச்சிட்டு அகராதிகள் வர வேண்டும் ..

அதுமட்டும் இல்லைமல் தமிழ் ஒரு சொலுக்கு பல அர்த்தம்கள் உள்ளன .

எடுத்துக்காட்டு: படி என்ற சொலுக்கு குணம் , சம்பளம் , ஒப்பு , விதம் , என பல அர்த்தங்கள் இருப்பதால் புரிந்துக்கொள்ள கடினமாக உள்ளது .

இதையும் எடுத்துக்காட்டு சேர்த்து சொன்னால் எளிதில் புரியும் .

இங்கிலீஷ் மொழி வளர்ந்ததிக்கு இந்த முறை முக்கிய காரணம் .

தமிழில் அகராதிகளில் தொழில்நுட்ப சொல்கள் பல உள்ளன . அவற்றை அகராதிகளில் இடம்பெற செய்ய வேண்டும் . அனைத்து துறைகளிலும் உள்ள தமிழ் தொழில்நுட்ப சொல்கள் திறடி அகராதிகளில் சேர்க்க வேண்டும் .

தமிழக அரசே அகராதிகளை குறைந்த விலைக்கு நூலககங்கள் வழியாக விற்க வேண்டும் .

எத்தனை சரியா செய்தலே தமிழ் மொழி நன்ற பரவி உலக மொழியை மாறும் என்பது என் கருத்து ..

வாழக தமிழ் ...

வெள்ளி, 9 அக்டோபர், 2009

பயணம் 1 வழி 2


பேருந்தில் பயணம் செய்த போது

வந்தது அந்த sms......

எடுத்து பார்த்து ,
ஒரு சிரிப்புடன் வைத்து விட்டேன் ....

நண்பனின் ஆறுதலுரை ......


பக்கத்தில் இருந்த்தவர் கேட்டார் ,

"என்ன சார் , சொக்கா ?"

பொய் சொல்ல மனமில்லை

வேலை போன கதையை சொன்னேன் .....


தன் நிறுத்தம் வந்ததாக சொல்லி

எழுந்தவர் திரும்பி , என்னைப் பார்த்து சொன்னார் ...

" தம்பி , கப்பலிலிருந்து தூக்கி வீசப்பட்ட

எலி நீ,

முளுகப்போகும் கப்பலிலிருந்து,

நீ நீந்தும் திசையில் தான் ...

தீவுகள் உள்ளன ....

கடவுள் உன்னை காப்பாற்றுவர் ....."


வண்டியின் சக்கரங்கள் சுழலும்போது ....

என் மனமும் கொஞ்சம் சுழன்றது முன்னேறியது ...

நம்பிக்கையை நோக்கி .....


அவர் சென்ற திசையைப் பார்த்து ..

கேட்டேன் ... " அல்லா !!!!! யார் இவர் ???!!!!"...

பதில் இல்லை ......

செவ்வாய், 8 செப்டம்பர், 2009

ப்ரோக்ராம் கவிதைகள்

என் புது முயற்சியாக ( எனக்கு தெரிந்த வரை ) இதை உங்களுக்கு கொடுக்கிறேன் . கவிதைகளையும் ப்ரோக்ராம்களையும் கலக்காமல் பல ஆண்டுக்கள் இருந்துவிட்டோம் . இனி கலந்து பார்போம். என் நண்பர்களான கிஷோர் மற்றும் சுந்தருக்கு என் அன்பான நன்றிகள் .

// என் காதலிக்காக நான் படைத்த முதல் கவிதை

// எனக்கு அவள் புது காதலி

வகை காதல்

{

அந்தரங்கமான தெய்விகமான உண்மையான இனிமையான (வாக்கியங்கள் பல[])

{

வாக்கியம் விளைவு ௧ = " புத்தனுக்கும் ஆசை வரும் ";

அவளிடம்.சொல்.தோழி (விளைவு ௧ );

அவளிடம்.சொல்.தோழி(" என்னவளின் முகம் பார்த்தால் ");

வாக்கியம் வினை =" என்னவளின் குரல் கேட்டால் ";

அவளிடம்.சொல்.தோழி(" சித்தனுக்கும் மனம் கிருங்கும் ");

அவளிடம்.சொல்.தோழி(வினை );

வாக்கியம் உண்மை ;

உண்மை =" பித்தனுக்கும் சித்தம் தெளியும் ";

அவளிடம்.சொல்.தோழி(உண்மை );

அவளிடம்.சொல்.தோழி("என்னவளின் கைவிரல் பட்டால் ");

வாக்கியம் என்நிலை ;

நிலை = " ஏன் ? எனக்கும் கூட மோட்சம் கிடைக்கும் ";

அவளிடம்.சொல்.தோழி(என்நிலை);

அவளிடம்.சொல்.தோழி( "என்னவளின் காதல் கிடைத்தால் ");

/// எழுதியதில் பிழை இருதுந்தால் மன்னிக்கவும்

// கண்டிப்பாக கருத்து சொலனுமுங்க

}

}

வியாழன், 25 ஜூன், 2009

கிறுக்கல்கள்


" கவிஞனாம் !!!!! நான் !!!!!!

இந்த உலகம் சொல்கிறது .........



நான்.........நம்புவதாக ..இல்லை .......



நான் ஒரு........... ரசிகன் ..........

ரசிதைவகளை .....

எனக்கு பிடித்த ... முறையில் ....

பதிவுசெய்கிறேன் ........


எழுத்துகளாக ..........."


சுவற்றில் கரியால் கிறுக்கி கொண்டிருந்த ... அந்த ..
பைத்தியகார கவிஞனை ......

உற்றுப்பார்த்துக் கொண்டே மனதில்
நினைத்துக் கொண்டார் ....

தன் காலை சுற்றுக்கு வந்த அந்த ....


மனநல மருத்துவர் ....



"நானும் இன்றிரவு கவிதை எழுத


முயற்சி செய்ய வேண்டும் "......



கற்றுகொள்ள .... எல்லோரிடமும் .... ஒன்று ... உள்ளது ......

சனி, 20 ஜூன், 2009

பயணம் ௨



அந்த நேரக்காப்பாளர் கட்டிய

திசையிலிருந்த பேருந்தில் , நானும்


கூட்டத்தோடு கூட்டமாக ,


பல்லியைபோல ஒட்டிக்கொண்டேன் .......



பேருந்தும் நேரமும் சேர்ந்து உருண்டது .....


நான் இடித்துக்கொண்டு உள்ளே சென்றேன்


நடத்துனரை பார்க்க முடியவில்லை

15 நிமிட ரெண்டுகால் தவத்திற்கு பிறகு

கூட்டம் குறைய தொடங்கியது ......



10 நிமிடம் கழித்து

இருக்கை ஒன்று கிடைத்தது .....


பக்கத்திலிருந்தவன் வாசனை ... தவறு ..


நாற்றம் ... மயக்கம் கொடுத்தது ......



15 நிமிட பிரதனைக்கு பின்


ஜன்னல் இருக்கை ஒன்று காலியானது ..


இடம் பெயர்த்தேன் .....



வேக தென்றல் வருடி விட்டது ...


தூங்க சொல்லி தட்டிக் கொடுத்தது ....




"ஹலோ !!.. தூங்கிடிங்கள ?!!!... டிக்கெட் எடுங்க ..."


"சிதம்பரத்கு ஒன்னு "


"சிதம்பரமா ? இது விழுப்புரம் போற பஸ்சு ...!!!!!"




இது தான் இன்றைய மக்களின் வேகமான வாழ்கையின் முடிவு ................

செவ்வாய், 16 ஜூன், 2009

ஒரு எளிய விளக்கம் ..

என் 'ஒரு நிமிட கதைகளுக்கு என் அன்பு நண்பர்கள் கருத்துரை தெரிவிதுரிகிறார்கள் . அவர்களுக்கு என் மகிழ்ச்சிகலந்த நன்றிகள் .. நான் இந்தா ஒரு நிமிட கதைகளை எழுத துண்டியது சாந்தன் எனுன் இலங்கை தமிழனின் படைப்புகள் .. பாதிப்புகள் இல்லாமல் ஒருவன் எழுத முடியாது .. நானும் கூட ..

புதன், 10 ஜூன், 2009

விரும்பி சொன்ன உண்மை ...


கடைசியாக சொன்னேன் ..


காதலிக்காக என் முதுகில்


கத்தியால் குத்த வந்த


நண்பனிடத்தில் ...

" என் அன்பு சிநேகிதா !

என் உயிர் உனக்கு தான் ..... கவலைபடாதே ....

சிநேகிதா ! ராஜாக்கள் அடிமைகளின்

கைகளில் சாக விரும்புவதில்லை ....


அதனால் கத்தியை மேஜையில் வைத்து விட்டு போ....

நானே குத்திக்கொண்டு சாகிறேன் ....

உன்னை நண்பனாக அடைந்ததிற்ற்கு ......"


சதுக்

கத்திக் குத்தபடட்து ....


எங்கே குத்தபடிருகும் ...?!!!!!!!!!


கொலைய ?!!.... தற்கொலையா ?!!!!!!!!!..... ரெண்டுமில்லைய ?!!!!!!!...


அது உங்கள் விருப்பம் ..............


வியாழன், 4 ஜூன், 2009

ஒரு எளிய அறிமுகம்

இந்த 'ஒரு நிமிட கதைகள் " என்கிற என் கதைகள் கவிதைத்தனமாக எழுதப்பட்டன . ஒரே நிமிடத்தில் கதைகளை சொல்லல வேண்டும் .
அதுவே விதி . என் கதைகளை உங்களுக்கு தருகிறேன் .
விரும்பினால் .. கருத்துக்கள் சொல்ல்லுகள் ..

சனி, 23 மே, 2009

பூம்புகார் இந்திர விழா


நிறைந்த பொர்ணமி ... என் இயந்திர குதிரையை எடுத்துகொண்டு .. கடலை நோக்கி .. பயணித்தோம் ... நானும் என் இனிய நண்பன் சுந்தரும் .... சோழனின் பழைய தலைநகர் ... பூகரை ... நினைத்துக்கொண்டு ...



பெயரளவிலே மட்டுமே ... அது .. இந்திரா விழா .. ஆனால் எங்களுக்கு ... சந்திர விழா ... 2500 ஆண்டுகளுக்கு மேல் கொண்டாடப்படும் ... சரித்திர விழா ... தமிழர்களால் மறக்கப்பட்ட ஒரு பழமையான புதுமை விழா .. பொங்கலுக்கும் தீபாவளிக்கும் முந்தின விழா ...



சைகததில் நடந்துவிட்டு .. ஒரு பாறையில் அமர்தோம் .... வெனிலா வானில் .. பல நிலாக்கள் மண்ணில் .... பார்த்துக்கொண்டே பழமை பேசினோம் ...



காதல் , பாசம் , நட்பு , அறிவியல் என பல பேசி ... நாங்கள் நகர்தோம்..



நிலவும் நகர்ந்தது .. இது என் புது அனுபவம் ..



இனி பயணிப்பேன் ... கவனிப்பேன் .. பூப்பிபேன் ...

வியாழன், 14 மே, 2009

பசங்க

ரசிகன் : வணக்கம் .... என்ன இந்தபக்கம் ?
விமர்சகர் : இல்ல .. சும்மா ... ஒரு படம் பாக்கலாமுன்னு !...
ரசிகன் : பொய் சொல்ற்றிக .... "பசங்க' படம் பாத்துட்டு ராத்திரி அலுதிகலம் ?...
விமர்சகர் : யார் சொன்னது ? நான் அழல ....
ரசிகன் : அப்றம் ...
விமர்சகர் : feel பான்ன்னது ... உண்மை ....
ரசிகன் : இப்ப சொலுங்க படம் அப்படி ?
விமர்சகர் : நாலா இருக்கு ...
ரசிகன் : என்ன சார் .... சூப்பர் படம் ...
விமர்சகர் :பசங்களுக ? இல்ல நமக்க ?
ரசிகன் : எல்லோருக்கும் ........
விமர்சகர் : exactly my sentiments ......
ரசிகன் : yep.. eat your heart out you ! commercial directors!. ...

ஒரு சின்ன கேள்வி

வாழ்க்கை ....



பலருக்கு ஓட்டப்பந்தயம் ....
சிலருக்கு நூலக பிரவேசம் ....


அவர்களுக்கு சோதனைக் கூடம் .
இவர்களுக்கு உடற்பயிற்சி கூடம் ...


அவனுக்கு இன்ப சுற்றுலா ...
இவனுக்கு மரம் நடும் திருவிழா ...
உவனுக்கு ஆன்மிக யாத்திரை ...
எனக்கு....
சமையலறை.....



உனக்கு ?.......

வெள்ளி, 10 ஏப்ரல், 2009

காலை நாவினால் நித்திரை களைப்பாய் 
கால்களை ஆட்டிக்கொண்டு ஓட அழைப்பை 
அருந்தும் தேனிரில் பங்கும் கேட்பாய்
குளிக்க அழைத்தால முடியதேன்பாய் 
அன்பை என்னை ஒற்று பார்ப்பாய்
மௌனமாய் ஆயிரம் கேள்விகள் கேட்பாய்
என் தன் பிரிவால் பசியை மறப்பாய்
என்னை கண்டதும் துள்ளி அணைப்பாய் 
மாலை என்னோடு சண்டை செய்வாய்
இன்ப கிறல்கள் பரிசை தருவாய்
இரவில் என் தன் மடியில் அமர்வாய்
நானும் ஊட்ட ரசித்து உண்பாய்
படுகையில் என்னை உரசி படுப்பாய்
தடவிகொடுக்க உறங்கிப்போவவாய்

 ...  ......... And this poem is purely dedicated to my pets juno and tony and also to my significant other ... it is a pun kind of poem.

ஞாயிறு, 5 ஏப்ரல், 2009

oscar : just a step away !

After reviewing SM . i asked my self am i doing the right thing. And this led me to write a story or screenplay to my film ( dont get ideas about MAKING A MOVIE) . I personally think indians are great film lovers and I want to give thenm a good movie comprises of good blend of vaious entertaining factirs. so i and a good friend of mine cookd up a story which gonna be a sure hit . Yes . I am damn sure. and I want all your support and advices and suggestions to make a good screenplay out of our rough copy. and I also want the readers to try their own to finish it, if they can.

Coming to the point, I have not introduced you to our story yet. Well! the title of story is "the east india company". So try if you have good sense of history and good imagination power. We have been discussing it over months.

The story tells about how the British captured India in that peroid and racial discrimination and TIPPU SULTAN and some imaginary charecters
and so many inner details in that period of time. IT has been quite a big research to us to do a screenplay which should be watched by all kind of people around the world. We need to explore the untouched part of the history. I dont think a british or an amercian or even a north indian can do a good screenplay for it.Sso being a tamil, and if you are interested in making stories you can try , because it is the first step towards OSCAR.

வெள்ளி, 6 மார்ச், 2009

நானும் பணக்காரன் (slumdog millionire)

விமர்சகர் : வணக்கம் .... ரசிகன் அவர்களே.....
ரசிகன் : வணக்கம் ... விமர்சகர் அவர்களே....
விமர்சகர் : அப்புறம் ..... இந்த வாரம் எந்த படம் பாத்திங்க ......
ரசிகன் : slumdog millionire..... நீங்க ?....
விமர்சகர் : நானுந்தான் ......
ரசிகன்: படம் அப்படி ?.....
விமர்சகர் : அபரவளே .....
ரசிகன் : என்ன புடிகலய ?
விமர்சகர் : இல்ல ......... english படமா பார்த்த புடிக்கும்... ஆனா ...
ரசிகன் : ஆனா என்ன ....
விமர்சகர் : இந்தியாவா கொஞ்சம் நல்ல கட்டி இருக்கலாம்...
ரசிகன் : நீங்க சொல்றது சரி தன் .... லண்டன்ல சேரியே இல்லன்னு தன் பொய்லே இங்க வந்தாரா...?!...
ரசிகன் ; ஆனா அவர் தப்ப சொலலேயே .....
விமர்சகர்: ரொம்ப இல்ல ....
ரசிகன் : சரி .... முடிவ என்ன சொல்றேங்க....?
விமர்சகர் : பாருங்க .....
ரசிகன் : என்னகு புடிச்சிருக்கு .....





"சும்மா சும்மா " ஒரு கவிதை

இப்போதெல்லாம் தோன்றுகிறது
எப்போதோ நீ என்னிடம் பேசிய
அந்த ஒரு வார்த்தை

திரும்ப திரும்ப சொல்கிறேன்
ரசித்து ரசித்து கேட்கிறேன்

என் அர்த்தம் தேடும் முயற்சியில்
எனக்கு தோல்வியை தந்த
அந்த ஒரு வார்த்தை

தேடி தேடி பார்க்கிறேன்
தோற்று தோற்று போகிறேன்

உன் நினைவாக எனக்கு
நீ கொடுத்து மறைந்த
அந்த ஒரு வார்த்தை




டேய் ! நாயே ! தூங்குடா ... உன் தொல்ல தங்க முடியல ....

இல்ல மச்சான் ... சும்மா ... சும்மா.....

வெள்ளி, 6 பிப்ரவரி, 2009

என் பக்கம்

என் பக்கம் என்ற இந்த வலை பூவை என் உணர்வுகளககொல்க. நான் ஒரு சாதரண எழுத்தாளன் . இங்கே அரசியல் பேச எனக்கு பிடிக்கவில்லை .. ஆதலால் எனக்கு பிடித்தவற்றை எழுதுகிறேன் . கவிதை என் தோழன் . இப்பொது கதைகள் ........ என் முதல் கதையின் தலைப்பு "பரிமாண வளர்ச்சி " ... ஒரு மனிதன் தன் எண்ணங்கள் சரியாக இல்லாவிட்டால் ... அவற்றை மாற்றிகொள்ள வேண்டும் .... அதுவே கரு ...

வெள்ளி, 30 ஜனவரி, 2009

பிழைகள்

பிழைகளினால் பிறந்தோம்
பிழைகள் செய்து வளர்த்தோம்
பிழைகளை பிழை இல்லாமல் செய்து பிழைக்க கற்றுகொண்டோம் நாம்
பிழைக்க பல வழிகளை தெரிந்தா நாம்
ஏன்று வாழ கற்றுகொள்ளபோகிறோம் ?