செவ்வாய், 27 அக்டோபர், 2009

தமிழ் வளர தமிழக அரசு செய்ய வேண்டியது

தமிழைப் பற்றி அதிகம் கவலைப் படுவோர் , தமிழின் வளச்சிக்கு அத்தனை துணை புரிந்ததாக தெரியவில்லை . மற்ற மொழிகளை போல தமிழ் மொழியை விரும்பி கற்க எந்த தமிழரும் முன் வருவதில்லை . அவர்கைளை கேட்டால் , மொழியின் கடினதனமையினை காரணமாக சொல்ல்கிறார்கள் . தமிழ் நிஜத்தில் கடினமான மொழி இல்லை. இருந்தும் தமிழ் வளர்ச்சி இங்கிலீஷ் மொழியை பார்க்கும் பொது மிக குறைவான வளர்ச்சியே அடைந்திருக்கிறது . ஏனென்றால் ? தமிழை கற்க சரியான வழிகாட்டி இல்லை என்பதே . வழிகாட்டி என்று நான் கூறுவது தமிழ் அகராதியை...

உலக தமிழ் மாநாடு நடக்கவிருக்கும் இந்த நேரதில் , நான் எதை கூறுவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் .

ஒரு மொழியை கற்று நான்கு தேர்ச்சிபெற , அந்த மொழியின் அகராதியின் உதவி மிக முக்கியமாக தேவை . நாம் தமிழ் மொழி அகராதிகளை பார்த்தால் அப்படி " தமிழ்ப் பற்றுடன்" இருப்பதக தெரியவில்லை. நமது அகராதிகள் பல பிழைகளையும் குறைகளையும் உள்ளடக்கியதாக உள்ளது .

நமது அகராதிகளில் உள்ள குறைகள் :

எந்த அகராதிகளிலும் எடுத்துக்காட்டுகள் இல்லை , இங்கிலீஷ் அகராதிகளை போல் . அதவே நமது பெரிய குறை .

எடுத்துக்காட்டு: விபணி என்றால் அங்காடி அல்லது சந்தை என்று பொருள் .

எதை அபபடியே தராமல் ,

வினோத் விபணி வரை போயிருக்கான் . என்று சராசரி தமிழனுக்கும் புரியும் படி அச்சிட்டு அகராதிகள் வர வேண்டும் ..

அதுமட்டும் இல்லைமல் தமிழ் ஒரு சொலுக்கு பல அர்த்தம்கள் உள்ளன .

எடுத்துக்காட்டு: படி என்ற சொலுக்கு குணம் , சம்பளம் , ஒப்பு , விதம் , என பல அர்த்தங்கள் இருப்பதால் புரிந்துக்கொள்ள கடினமாக உள்ளது .

இதையும் எடுத்துக்காட்டு சேர்த்து சொன்னால் எளிதில் புரியும் .

இங்கிலீஷ் மொழி வளர்ந்ததிக்கு இந்த முறை முக்கிய காரணம் .

தமிழில் அகராதிகளில் தொழில்நுட்ப சொல்கள் பல உள்ளன . அவற்றை அகராதிகளில் இடம்பெற செய்ய வேண்டும் . அனைத்து துறைகளிலும் உள்ள தமிழ் தொழில்நுட்ப சொல்கள் திறடி அகராதிகளில் சேர்க்க வேண்டும் .

தமிழக அரசே அகராதிகளை குறைந்த விலைக்கு நூலககங்கள் வழியாக விற்க வேண்டும் .

எத்தனை சரியா செய்தலே தமிழ் மொழி நன்ற பரவி உலக மொழியை மாறும் என்பது என் கருத்து ..

வாழக தமிழ் ...

வெள்ளி, 9 அக்டோபர், 2009

பயணம் 1 வழி 2


பேருந்தில் பயணம் செய்த போது

வந்தது அந்த sms......

எடுத்து பார்த்து ,
ஒரு சிரிப்புடன் வைத்து விட்டேன் ....

நண்பனின் ஆறுதலுரை ......


பக்கத்தில் இருந்த்தவர் கேட்டார் ,

"என்ன சார் , சொக்கா ?"

பொய் சொல்ல மனமில்லை

வேலை போன கதையை சொன்னேன் .....


தன் நிறுத்தம் வந்ததாக சொல்லி

எழுந்தவர் திரும்பி , என்னைப் பார்த்து சொன்னார் ...

" தம்பி , கப்பலிலிருந்து தூக்கி வீசப்பட்ட

எலி நீ,

முளுகப்போகும் கப்பலிலிருந்து,

நீ நீந்தும் திசையில் தான் ...

தீவுகள் உள்ளன ....

கடவுள் உன்னை காப்பாற்றுவர் ....."


வண்டியின் சக்கரங்கள் சுழலும்போது ....

என் மனமும் கொஞ்சம் சுழன்றது முன்னேறியது ...

நம்பிக்கையை நோக்கி .....


அவர் சென்ற திசையைப் பார்த்து ..

கேட்டேன் ... " அல்லா !!!!! யார் இவர் ???!!!!"...

பதில் இல்லை ......