தமிழைப் பற்றி அதிகம் கவலைப் படுவோர் , தமிழின் வளச்சிக்கு அத்தனை துணை புரிந்ததாக தெரியவில்லை . மற்ற மொழிகளை போல தமிழ் மொழியை விரும்பி கற்க எந்த தமிழரும் முன் வருவதில்லை . அவர்கைளை கேட்டால் , மொழியின் கடினதனமையினை காரணமாக சொல்ல்கிறார்கள் . தமிழ் நிஜத்தில் கடினமான மொழி இல்லை. இருந்தும் தமிழ் வளர்ச்சி இங்கிலீஷ் மொழியை பார்க்கும் பொது மிக குறைவான வளர்ச்சியே அடைந்திருக்கிறது . ஏனென்றால் ? தமிழை கற்க சரியான வழிகாட்டி இல்லை என்பதே . வழிகாட்டி என்று நான் கூறுவது தமிழ் அகராதியை...
உலக தமிழ் மாநாடு நடக்கவிருக்கும் இந்த நேரதில் , நான் எதை கூறுவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் .
ஒரு மொழியை கற்று நான்கு தேர்ச்சிபெற , அந்த மொழியின் அகராதியின் உதவி மிக முக்கியமாக தேவை . நாம் தமிழ் மொழி அகராதிகளை பார்த்தால் அப்படி " தமிழ்ப் பற்றுடன்" இருப்பதக தெரியவில்லை. நமது அகராதிகள் பல பிழைகளையும் குறைகளையும் உள்ளடக்கியதாக உள்ளது .
நமது அகராதிகளில் உள்ள குறைகள் :
எந்த அகராதிகளிலும் எடுத்துக்காட்டுகள் இல்லை , இங்கிலீஷ் அகராதிகளை போல் . அதவே நமது பெரிய குறை .
எடுத்துக்காட்டு: விபணி என்றால் அங்காடி அல்லது சந்தை என்று பொருள் .
எதை அபபடியே தராமல் ,
வினோத் விபணி வரை போயிருக்கான் . என்று சராசரி தமிழனுக்கும் புரியும் படி அச்சிட்டு அகராதிகள் வர வேண்டும் ..
அதுமட்டும் இல்லைமல் தமிழ் ஒரு சொலுக்கு பல அர்த்தம்கள் உள்ளன .
எடுத்துக்காட்டு: படி என்ற சொலுக்கு குணம் , சம்பளம் , ஒப்பு , விதம் , என பல அர்த்தங்கள் இருப்பதால் புரிந்துக்கொள்ள கடினமாக உள்ளது .
இதையும் எடுத்துக்காட்டு சேர்த்து சொன்னால் எளிதில் புரியும் .
இங்கிலீஷ் மொழி வளர்ந்ததிக்கு இந்த முறை முக்கிய காரணம் .
தமிழில் அகராதிகளில் தொழில்நுட்ப சொல்கள் பல உள்ளன . அவற்றை அகராதிகளில் இடம்பெற செய்ய வேண்டும் . அனைத்து துறைகளிலும் உள்ள தமிழ் தொழில்நுட்ப சொல்கள் திறடி அகராதிகளில் சேர்க்க வேண்டும் .
தமிழக அரசே அகராதிகளை குறைந்த விலைக்கு நூலககங்கள் வழியாக விற்க வேண்டும் .
எத்தனை சரியா செய்தலே தமிழ் மொழி நன்ற பரவி உலக மொழியை மாறும் என்பது என் கருத்து ..
வாழக தமிழ் ...
